×

வாடகைக்கு டிராக்டர் எடுத்து சென்றவர் மாயம்

 

விருத்தாசலம், ஆக. 27: விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன்(50), விவசாயி. இவருக்கு சொந்தமான டிராக்டரை மாதவாடகை தருவதாக கூறி, விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த மதியழகன்(47) என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். 3 மாதம் ஆகியும் மதியழகன் வாடகையும் தரவில்லை, டிராக்டரையும் திரும்ப ஒப்படைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன், அவரை சென்று பார்த்தபோது வீட்டிலும் அவர் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதியழகன் மற்றும் டிராக்டரை தேடி வருகின்றனர்.

The post வாடகைக்கு டிராக்டர் எடுத்து சென்றவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Vridthachalam ,Kalaivanan ,Kargudal ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...